ஊரக வளர்ச்சித்துறையினர் கன்டன ஆர்ப்பாட்டம்
8/24/2022 7:02:55 AM
ஈரோடு, ஆக. 24: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் பாஸ்கர்பாபு பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் மீது, கடந்த அரசு எடுத்த பழி வாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து, அவர் பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும். வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களில் நடக்கும் ஆய்வு போன்றவற்றை கைவிட வேண்டும். பஞ்சாயத்து செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி இயக்குனர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி, பணி வரன்முறை செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது
சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு
மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பவானி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!