புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
8/17/2022 1:35:58 AM
புழல்: புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பரிமளம்(45). இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுவிட்டு வந்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 17 சவரனை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதேபோல் லட்சுமிபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பெருமாள்(48) இவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூத்துக்குடி சென்றிருந்த நிலையில், மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனடிப்படையில், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(40), ஸ்டீபன் (30), குழந்தைவேல் (34) ஆகிய மூவரும் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், மணிகன்டன், குழந்தைவேலு ஆட்டோ டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து, 45 சவரன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; இன்று முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்: மின்னஞ்சலில் முன்பதிவு
சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை
தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் திருட்டு விவகாரம்: கூலிக்கு ஆள் வைத்து கொள்ளையடித்து விட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்பிய காவலாளி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!