தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
8/13/2022 5:12:33 AM
தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பெரியார் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்முருகன் (36). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி மாவட்டம், ரங்கத்திற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இவரது வீடு உட்பட அருகில் உள்ள நான்கு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது செந்தில்முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 சவரன், தமிழ்ச்செல்வன் என்பவர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், அடுத்தடுத்த மூன்று வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே இரவில் இரண்டு வீடுகளில் கொள்ளை மற்றும் மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; இன்று முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்: மின்னஞ்சலில் முன்பதிவு
சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை
தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் திருட்டு விவகாரம்: கூலிக்கு ஆள் வைத்து கொள்ளையடித்து விட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்பிய காவலாளி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!