ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
8/6/2022 3:59:53 AM
வாடிப்பட்டி, ஆக. 6: வாடிப்பட்டியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் காஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் முருகானந்தம், வட்டாரத் தலைவர் குருநாதன், பழனிவேல், சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாநில துணைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மனிதஉரிமை பிரிவு மாவட்டத்தலைவர் ஜெயமணி ஆர்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் திரளான காங்கிரசார் பங்கேற்று மத்திய அரசினையும், மோடியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.* அவனியாபுரம் பகுதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!