SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்கால் அருகே சிவலோகநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா

8/2/2022 12:49:02 AM

காரைக்கால், ஆக.2: காரைக்கால் அடுத்த தல தெருவில் பிரசித்தி பெற்ற சிவலோகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதங்களில் வரும் ஆடிப்பூரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சிவகாமி அம்மனுக்கு சந்தனம், பால், பன்னீர் திரவியங்களின் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிவகாமி அம்மாளுக்கு புதிய வெள்ளி அங்கி சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் உற்சவர் சிவகாமி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டிய வரம் கிடைக்க வளையல் அணிவித்தனர். சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூராத்தை முன்னிட்டு சிவலோகநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்