தமிழக பஸ்சிற்கு அனுமதி மறுத்த கேரள வனத்துறையினரை கண்டித்து போராட்டம்
7/28/2022 7:34:02 AM
கம்பம், ஜூலை 28: மதுரையிலிருந்து தேக்கடி சென்ற தமிழ்நாடு அரசு பஸ்சை கேரள வனத்துறையினர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதை கண்டித்து, நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் குமுளி தமிழக எல்லையில் சென்று போராட்டம் முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். மதுரையில் இருந்து நேற்று முன்தினம் தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை தேக்கடி சோதனை சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
பஸ் ஊழியர்கள் பெர்மிட் இருப்பதாக எடுத்துக்கூறினாலும் வனத்துறையினர் பஸ்சை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதை கண்டித்து கூடலூர் விவசாய சங்கத்தினர், கம்பத்தில் இருந்து தேக்கடி பஸ்சில் தமிழக எல்லையில் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். இதனை தொடர்ந்து கம்பத்திலிருந்து பஸ்சில் குமுளி சென்று போராட்டம் நடத்த முயன்ற 4 பேரை போலீசார் பிடித்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
மேலும் கூடலூரில் இருந்து குமுளி சென்று போராட்டம் நடத்த பஸ்சில் சென்ற 3 பேரையும் போலீசார் பிடித்து காவல்நிலையத்தில் வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்
இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!