SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

7/28/2022 7:23:22 AM

திருப்பூர், ஜூலை 28: தேமுதிக சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் அக்பர் தலைமை வகித்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கோபால், மாநில மகளிரணி துணை செயலாளர் வனிதாதுரை, பட்டதாரி அணி துணை செயலாளர் ஜெகன், மாநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்