8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
6/25/2022 6:20:28 AM
தஞ்சாவூர், ஜூன் 25: தஞ்சாவூர் மாநகராட்சி 8 வது வார்டு உறுப்பினர் வார்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் ஜெய்லானி சமீபத்தில் திடீரென அகாலமரணம் அடைந்தார். இதை ஒட்டி மாநகராட்சி 8வது வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திமுக சார்பில் மறைந்த சுல்தான் ஜெய்லானி மகன் முகமது இப்ராகிம் சுல்தானா தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை,
கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீசன் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, கமலா ரவி ஆகியோர் உடன் சென்றனர்
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!