தினமும் மாலையில் தோகைமலையில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் : வளர்த்தல் குறித்த பயிற்சி
6/25/2022 6:08:01 AM
தோகைமலை, ஜூன் 25: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியின் 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கான ஆங்கிலம் பேச்சுத்திறன் வளர்த்தல் குறித்து பயிற்சிகள் நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் 2 மையங்களில் தனித்தனியே பயிற்சிகள் நடந்தது. இதில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 நாள் பயிற்சியும், கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சியும் நடந்தது.
இதில் எளிய முறையில் மாணவர்கள் மத்தியில் எப்படி ஆங்கிலம் மொழியை கற்பிப்பது, பேசுவது, எழுத வைப்பது என்ற தலைப்பில் எடுத்துக்காட்டுடன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் 109 பேரும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் 53 பேரும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் தோகைமலை வட்டார கல்வி அலுவலர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜகுமாரி, வட்டார வள மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், தலைமை ஆசிரியர்கள் வளர்மதி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
கரூர் கலெக்டர் அலுவலகம் முன் செல்லாண்டிபாளையம் மக்கள் தர்ணா
கடவூர் தாலுகாவில் நாளை துவக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, குட்கா பயன்பாடு தடுத்து நிறுத்த வேண்டும் பொதுநலஆர்வலர்கள் வலியுறுத்தல்
போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதாரதுறை இணைந்து பணியாற்ற வேண்டும்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!