நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி
6/25/2022 6:07:45 AM
வேலாயுதம்பாளையம், ஜூன் 25: கரூர் மாவட்டம் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகளூர் நகராட்சியை பசுமையான நகராட்சியாக்குதல் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் ஏ. குணசேகரன் தலைமையில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டு புகழூர் நகராட்சியை பசுமையான, தூய்மையான நகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும் எனவும், நகராட்சியை தூய்மையான நகராட்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தேவையற்ற வகையில் குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது எனவும் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், மற்றும் நகராட்சி துப்புரவு மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
கரூர் கலெக்டர் அலுவலகம் முன் செல்லாண்டிபாளையம் மக்கள் தர்ணா
கடவூர் தாலுகாவில் நாளை துவக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
கரூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, குட்கா பயன்பாடு தடுத்து நிறுத்த வேண்டும் பொதுநலஆர்வலர்கள் வலியுறுத்தல்
போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை மற்றும் சுகாதாரதுறை இணைந்து பணியாற்ற வேண்டும்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!