நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் சப்பரபவனி
6/25/2022 6:02:50 AM
கேடிசி நகர், ஜூன் 25: நெல்லை சந்திப்பு உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் நேற்று சப்பர பவனி நடந்தது. நெல்லை சந்திப்பு உடையார்பட்டி இருதயநகர் திருஇருதய ஆண்டவர் திருத்தல மாணிக்க ஆண்டு விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியேற்றினார். விழா நாட்களில் கலைநிகழ்ச்சிகள், மறையுரை சிந்தனை, நற்கருணை பவனி ஆகியவை நடந்தது. நேற்று (24ம் தேதி) திருஇருதய திருவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி மறைமாவட்ட அதிபர் மோட்சராஜன் முன்னிலை வகித்தார். குருவிகுளம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி மறையுரை வழங்கினார். விழாவை யொட்டி இரவு 9 மணியளவில் சப்பர பவனி துவங்கியது. திருஇருதய ஆலய பங்கு சப்பரம் மற்றும் கிளை பங்குகளை சேர்ந்த 5 சப்பரங்கள் இந்த பவனியில் இடம் பெற்றன. சப்பர பவனி உடையார்பட்டி மெயின்ரோடு, பைபாஸ் ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மைக்கேல்ராசு, சரணாலய இயக்குநர் ஞானதினகரன், புனித சூசையப்பர் தொழில் முனைவோர் சங்கம் மற்றும் இருதய இளைஞர் இயக்கத்தினர் செய்திருந்தனர். விழாவில் இன்று மாலை 6 மணிக்கு மாணிக்க ஆண்டுவிழா, புதுநன்மை விழா மற்றும் குடும்ப விழா நடக்கிறது. இதில் பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி பங்கேற்கிறார்.
மேலும் செய்திகள்
உலக யானைகள் தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் மாணவர்களுக்கு யானைகள் விழிப்புணர்வு பயிலரங்கம்
அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: நெல்லையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி
நெல்லையில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு; ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்: ரூ.2.50 கோடி மானியம் என கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை அஞ்சல் கோட்டத்தில் 24 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை: நகர்ப்புற மக்கள் அதிக ஆர்வம்
நெல்லை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா
முள்ளிக்குளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!