விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மேலவாசல் முருகன் கோயிலில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு
6/25/2022 6:02:29 AM
நெல்லை, ஜூன்25: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பாளை தெற்கு பஜார் மேலவாசல் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். அவைத்தலைவர் மாடசாமி, பகுதி செயலாளர்கள் வால்ஸ்ஷேக், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில ெநசவாளர் அணி செயலாளர் மீனாட்சிசுந்தரம் பங்கேற்றார்.
பகுதி செயலாளர்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வன், மானூர் ஒன்றியம் வேல்பாண்டி, சின்னதம்பி, கிருஷ்ணகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.முருகன், மகளிரணி துணைச் செயலாளர் ரசீதாபானு, விஜயகாந்த் மன்ற செயலாளர் மாரியப்பன், துணைச் செயலாளர் லாலாபாரதி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் தவசிமுருகன், இருதயராஜ், வேல்முருகன், பாபுராஜ், தங்கப்பன், வாஞ்சிநாதன், ஆறுமுகபிரியன், இசக்கி, வேலாயுதம், அமல்ராஜ், ரபீக், அனஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட துணைச்செயலாளர் பூக்கடை செல்வகுமார் செய்திருந்தார்.
மேலும் செய்திகள்
உலக யானைகள் தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் மாணவர்களுக்கு யானைகள் விழிப்புணர்வு பயிலரங்கம்
அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: நெல்லையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி
நெல்லையில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு; ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்: ரூ.2.50 கோடி மானியம் என கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை அஞ்சல் கோட்டத்தில் 24 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை: நகர்ப்புற மக்கள் அதிக ஆர்வம்
நெல்லை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா
முள்ளிக்குளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!