பூதூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடல்; 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்: விவசாயிகள் வேதனை
6/25/2022 5:46:36 AM
மதுராந்தகம், ஜூன் 25: பூதூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால், 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் உள்ள ஈசூர், சகாயநகர் ஆகிய கிராமங்கள் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து அறுவடை செய்தனர். இந்நிலையில், பூதூர் ஊராட்சியில், அரசு திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்து வந்த நிலையில், நெல் கொள்முதல் செய்வது திடீர் என அங்கு நிறுத்தப்பட்டது.
இதனால், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு உள்ள விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உதவி மேலாளர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, அங்கு கூடியிருந்த விவசாயிகள் கூறியதாவது இந்த பகுதியில் கொட்டி வைத்துள்ள நெல் முழுவதும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் இங்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கூறினர்.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!