வறுத்த கறியில் மசாலா எங்கே? அடிதடியில் ஈடுபட்ட 3 பேர் கைது
6/14/2022 5:14:20 AM
தாம்பரம்: சேலையூரை சேர்ந்த ராஜா எம்.ஜி.ஆர் நகர் அருகே பாஸ்ட் புட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு சொகுசு காரில் போதையில் வந்த 3 பேர், புரோட்டா மற்றும் வறுத்தக்கறி பார்சல் கேட்டுள்ளனர். அப்போது வறுத்தகறியில் மசாலா இல்லை என கூறி கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் அடிதடி தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.மதுராந்தங்கம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (22), சேலையூர், பாரத் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (20), மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ரோஹித் விக்கி (27) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
மேலும் செய்திகள்
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ.5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்
சென்னை மாநகரில் இயக்க 100 மின்சார பேருந்துகள் கொள்முதல்: எம்டிசி நிர்வாகம் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது
வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை
ராஜிவ்காந்தி சாலையில் ஆக்கிரமிப்பில் சர்வீஸ் சாலை: போக்குவரத்து பாதிப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!