பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
6/14/2022 5:06:46 AM
கிருஷ்ணகிரி, ஜூன் 14: கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலில் தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலில், தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 10ம் தேதி காலை, சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. 12ம் தேதி இரவு ஸ்தல சுத்தி, புண்ணியாகவாசனம், கோ பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், உதகசாந்தி பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை உற்சவருக்கு அபிஷேகமும், திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. காலை 9 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், மதியம் 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, மாலை 4 மணிக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6 மணிக்கு தாயார் சமேத சுவாமி கோயில் திருச்சுற்று பல்லக்கு சேவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
குளிக்க தடை நீடிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
மளிகை கடையில் ₹1.32 லட்சம் குட்கா பறிமுதல்
4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கருணாநிதி படத்திற்கு மாலை
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 ஆயிரம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம்
கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!