கலெக்டர் ஆய்வு பொன்னமராவதி பகுதியில் 113 அரசு பள்ளிகளில் இலவச புத்தகம் வழங்கல்
6/14/2022 5:00:05 AM
பொன்னமராவதி,ஜூன் 14: பொன்னமராவதி பகுதியில் உள்ள 113 அரசு பள்ளிகளில் நேற்று இலவச புத்தகம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள கருப்புக்குடிப்பட்டி, வேந்தன்பட்டி, ஏனாதி பிடாரம்பட்டி, வேகுப்பட்டி, பி.உசிலம்பட்டி, காட்டுப்பட்டி, கொன்னையூர், கொன்னைப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி, தூத்தூர், அம்மன்குறிச்சி, காரையூர், ஒலியமங்களம், சேரனூர், கூடலூர், அரசமலை, நெறிஞ்சிக்குடி, மேலமேலநிலை, கேசராபட்டி, புதுப்பட்டிஉட்பட 84 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், பொன்.புதுப்பட்டி, கட்டையாண்டிபட்டி, பிச்சக்காலான்பட்டி, மைலாப்பூர், கண்டியாநத்தம், இடையாத்தூர், கொன்னையம்பட்டி, கல்லம்பட்டி, மரவாமதுரை, ஆலம்பட்டி, செம்பூதி உள்ளிட்ட 18 ஊராட்சி ஒன்றிய நடுலைப்பள்ளி, திருக்கம்பூர், கருப்புக்குடிப்பட்டி, வார்பட்டு 3அரசு உயர்நிலைப்பள்ளி, மேலைச்சிவபுரி, ஆலவயல், நகரப்பட்டி, சடையம்பட்டி, காரையூர், மேலத்தானியம், நல்லூர் உள்ளிட்ட 8அரசு மேல்நிலைப்பள்ளி என 113அரசு பள்ளியில் பயிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. உள்ளாட்சிப்பிரதிகள், தலைமையாசிரியர்கள். ஆசிரியர்கள் பாடப்புத்தகங்கள் வழங்கினர்.
மேலும் செய்திகள்
திருமயம் அருகே திருவேட்டழகர் கோயில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் திறப்பு
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம்
பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
கந்தர்வகோட்டை வெள்ளை முனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடி ஏற்ற பிரசாரம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!