மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
6/14/2022 4:59:08 AM
பெரம்பலூர்,ஜூன்14: பெரம்பலூரில் இன்று (14ம்தேதி) மின்நுகர்வோர் குறை தீர்கூட்டம் நடைபெறுகிறது என கோட்டசெயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், பெரம்பலூர் 4 ரோடு அருகேயுள்ள, மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று (14ம்தேதி) காலை 11மணிமுதல் பகல் 1மணி வரை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அதிமுக, பாமகவினர் திமுகவில் ஐக்கியம் விபத்தில் தொழிற்சங்க தலைவர் மூளை சாவு
மூளையில் கட்டி மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தலித் கிறிஸ்தவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!