கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
6/14/2022 4:16:06 AM
பெரியகுளம், ஜூன் 14: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், அருவிக்கு வரும் நீர்வரத்து சீராக இருந்தது. இந்நிலையில் கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வட்டக்கானல், கொடைக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவிக்கு கீழ் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், நீண்ட நாட்களுக்கு பின்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து கட்டிய சுவரை இடிக்கும் பணி துவக்கம்
நடுவனூரில் கிடா கறி விருந்து
பழநி வழித்தடத்தில் நிறுத்திய ரயில்களை இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
கொடைக்கானலில் அட்டகாசம் செய்த குரங்குகள் ‘அரஸ்ட்’
தேவதானப்பட்டியில் காங்கிரசார் நடை பயணம்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!