சேர்ந்தமங்கலம் ஊராட்சியில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்
6/11/2022 3:11:39 AM
ஸ்ரீபெரும்புதூர்: தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கத்துடன் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இதனையடுத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை உயரம், எடை கண்காணிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!