கோயில் திருவிழாவில் எருதுகட்டு
6/9/2022 3:26:42 AM
சாயல்குடி, ஜூன் 9: முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் கோயில் திருவிழாவையொட்டி எருதுகட்டு நடந்தது. முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் அரியநாயகியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா மற்றும் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை நடந்தது. நேற்று காலையில் சாமி சிலைகள், தவளும் பிள்ளை உருவங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து எருதுகட்டு நடத்தப்பட்டது. தேனி, மதுரை, விருதுநகர். சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். முதுகுளத்தூர் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு எருதுகட்டு நடத்தப்பட்டதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வந்து பார்த்து ரசித்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!