போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
6/9/2022 3:16:20 AM
நாமக்கல், ஜூன் 9: ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்க, பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதற்கான கடிதத்தை, கலெக்டரிடம் அமைச்சர் மற்றும் எம்பி., வழங்கினர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்கு கீழுர், மேலூர், கெடமலை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3,500க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். போதமலை, கீழுர் ஊராட்சிக்கு வடுகம் முதல் மேலூர் வரை மற்றும் புதுப்பட்டி முதல் கெடமலை வரை, வனப்பகுதி வழியாக புதிய சாலை அமைக்க பல்லாண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கீழ் செயல்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், போதமலையில் உள்ள கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு, 34 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதன்படி, போதமலை கீழூர், மேலூர் மலைக் கிராமங்களுக்கு, வடுகத்திலிருந்து 23.65 கி.மீ. நீளத்திற்கும், ஆர்.புதுப்பட்டியிலிருந்து கெடமலைக்கு 11.37 கி.மீ. தொலைவிற்கும் சாலை அமைக்க, உச்சநீதிமன்றத்தின் பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி ஆணையின் உண்மை நகலை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கை சந்தித்து வழங்கினர். அப்போது எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம்
தி.கோடு, எலச்சிபாளையம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவிப்பு
எருமப்பட்டி வட்டாரத்தில் மல்லிகை அறுவடை தீவிரம்
வீடுகள் தோறும் 3 நாள் தேசியக்கொடி ஏற்றுங்கள்
திருச்செங்கோடு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்: ரிங் ரோடு அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
திமுக நிர்வாகிகள் மலரஞ்சலி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!