தூய்மைக்கான மக்கள் இயக்க பேரணி
6/8/2022 3:46:19 AM
பரமக்குடி, ஜூன் 8: பரமக்குடி நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேரணி நகராட்சி கமிஷனர் திருமால் செல்வம் தொடங்கி வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து பரமக்குடி நகராட்சி, பரமக்குடி வைகை அரிமா சங்கம், உதயம் பவுண்டேஷன் இணைந்து நகரங்களை தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். தொடர்ந்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்திலிருந்து நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி சென்றனர். இந்த பேரணியை பரமக்குடி நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் அய்யனார், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் பழ சரவணன் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!