தீர்த்தக்குட ஊர்வலம்
6/8/2022 3:22:02 AM
தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரி அருகே செட்டிக்கரை ஊராட்சிக்குட்பட்ட நீலாபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து விழா குழுவினர்களுக்கு கங்கணம் கட்டுதல் நடந்தது. நேற்று காலை ஏராளமான பெண்கள் தீர்த்தகுடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நாளான 9ம் தேதி காலை 7.30 மணிக்கு 4ம் கால பூஜையை தொடர்ந்து காலை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நீலாபுரம் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தது.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!