கந்தர்வகோட்டை பகுதிகளில் இரவு நேர மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
6/8/2022 3:15:46 AM
கந்தர்வகோட்டை, ஜூன் 8: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், மழையின்றி வறண்ட நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் பரிதவித்த நிலையில் கடந்த இரு தினங்களாக நள்ளிரவு நேரங்களில் இடியுடன் கனமழை பெய்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் வறண்டு காணப்பட்ட வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நீர் ஆழ்துளை கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயத்திற்கு இந்த மழை பயன்படுவதாகும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தொடர் மழை தொடர்ந்து பெய்தால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்து தண்ணீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர், இதனால் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். தற்சமயம் பெய்த மழை நடவுக்கு சற்று ஏற்றது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கறம்பக்குடி அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பென்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு
புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்
நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி?
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!