மின்கம்பம் அமைப்பதில் பிரச்னை மறியல் செய்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மீது வழக்கு
6/6/2022 4:13:59 AM
தர்மபுரி, ஜூன் 6: தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியில் உள்ள ராயல் நகரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதை ஒட்டியுள்ள விஜயா நகரில் வசித்து வருபவர் முனுசாமி(65), ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி கோவிந்தம்மாள், அரசு பள்ளி ஆசிரியை. பொதுவான வழிப்பாதையை இரு பகுதியை சேர்ந்தவர்களும், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். முனுசாமியின் வீட்டை ஒட்டி 20 ஆண்டுக்கு முன்பு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கருதிய முனுசாமி, அதனை சற்று தள்ளி வைக்க வேண்டுமென விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், தர்மபுரி மின்வாரிய அதிகாரிகள், நேற்று முன்தினம், முனுசாமியின் வீட்டிற்கு அருகிலேயே, மற்றொரு இடத்தில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், சேலம் -தர்மபுரி பைபாஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். மேலும், புதிய மின்கம்பம் நடுவதை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை கோவிந்தம்மாளை, பெண் போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மற்றொரு இடத்தை தேர்வு செய்து, மின்கம்பம் நடும் பணி நடந்தது. இதனிடையே தடங்கம் விஏஓ கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக, ராயல்நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரத்தினவேல், செயலாளர் பழனிவேல், பொருளாளர் சுதாராணி மற்றும் நிர்வாகிகள் மீது, அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!