கமுதி அருகே வைகாசி பொங்கல் விழா
6/6/2022 4:11:17 AM
கமுதி: கமுதி அருகே வைகாசிப் பொங்கல் விழாவில் 200 கிடாய் வெட்டி விருந்து படைக்கப்பட்டது.கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவிலில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பால்குடம், வேல் குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தி வழிபட்டனர். பின்னர் 200 கிடாய் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. பின்னர் திருவிளக்கு பூஜை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!