சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
6/6/2022 4:10:24 AM
திருவாடானை: திருவாடானை ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தலைவர் இலக்கியா ராமு தலைமையில் தூய்மைப்பணி முகாமை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன் துவக்கி வைத்தார். இந்த முகாம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் வழியாக தேரோடும் நான்கு வீதிகளையும் சுற்றி சன்னதித் தெரு வழியாக வந்தடைந்தனர். தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாமில் பாலித்தீன் பைகளை கடைகளில் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.இந்த முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்சிராணி, ஊராட்சி செயலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் செல்லும் வழியில் கிடந்த பாலித்தீன் பைகளை சாக்குப்பைகளில் சேகரித்து ஊராட்சியில் ஒப்படைத்தனர்.அதன் பிறகு மங்களநாதன்குளம் அருகில் தலைவர் இலக்கியாராமு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!