கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
6/4/2022 2:45:02 AM
தர்மபுரி, ஜூன் 4: தர்மபுரி அருகே மகேந்திரமங்கலம் வேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன். இவரது மனைவி ராஜம்மாள்(75). இவர், பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1ம் தேதி வழக்கம்போல், பொருட்களை சேகரிக்க சென்ற ராஜம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ராஜம்மாள் சடலமாக கிடந்தார். தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார், சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து ராஜம்மாள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!