மூதாட்டி வீட்டில் பணம், நகை திருட்டு
6/4/2022 2:44:50 AM
தர்மபுரி, ஜூன் 4: காரிமங்கலம் அருகே செல்லனஅள்ளியைச் சேர்ந்தவர் கதிரியம்மாள்(62). இவரது கணவர் சின்னசுப்பு, கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இதனால், கதிரியம்மாள் வீட்டில் தனியாக உள்ளார். தினமும் மாலை நேரத்தில் பக்கத்து வீட்டுக்கு சென்று, கதிரியம்மாள் டிவி பார்த்து விட்டு, இரவு வீட்டுக்கு வருவது வழக்கம். கடந்த 1ம் தேதி இரவு, பக்கத்துக்கு வீட்டில் டிவி பார்த்துவிட்டு கதிரியம்மாள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டிற்குள் இருந்து 3பேர் ஓட்டம் பிடித்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 6.75 பவுன் தங்க நகை, 2 வெள்ளி கொலுசு, ₹55 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது
விடுதலைப் போரில் பங்கேற்ற அறியப்படாத வீரர்களை அறிந்து அவர்களை போற்ற வேண்டும்
அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்
லாரி சங்க மகாசபை கூட்டம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!