பிள்ளையன்மனை பரமேறுதலின் ஆலயத்தில் அசன விழா
5/28/2022 7:33:55 AM
நாசரேத், மே 28: பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் 123வது பிரதிஷ்டை விழா, கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிரதிஷ்டையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் ஆல்வின் ரஞ்சித்குமார் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளானோருக்கு அசன விருந்து வழங்கப்பட்டது.
இன்று (28ம் தேதி) வாலிப ஆண்கள் மற்றும் பெண்கள் பண்டிகை நடக்கிறது. திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்க இயக்குநர் ஜோசப் ஜேசன் அருட்செய்தி அளிக்கிறார். இரவு 9 மணிக்கு வாலிபர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (29ம் தேதி) காலை 8 மணிக்கு பாடகர் ஞாயிறும், இரவு 7.30 மணிக்கு ஸ்தோத்திர ஜெபக்கூட்டம் நடக்கிறது. ஜூலியஸ் ரிச்சர்டுசிங் செய்தி அளிக்கிறார்.
ஏற்பாடுகளை சேகர தலைவர் ஆல்வின்ரஞ்சித்குமார், ஆலய அசனகமிட்டி தலைவர் ராபின்சன், உபதலைவர் ஞானையா, செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் பொன்செல்வன், பொருளாளர் கோல்டன் பிரபு, இணை பொருளாளர் ஜோஷ்வா, சேகர செயலர் அதிசயம், பொருளாளர் பாஸ்கரன், எல்சிஎப் செயலாளர் ஞானசிங், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் திலகர், ஷம்மா, சபை ஊழியர்கள் டேனியல், டென்சிங் மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஏரல் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்
தூத்துக்குடியில் இன்றும், நாளையும் எஸ்ஐ பதவிக்கான எழுத்து தேர்வு
ஸ்ரீவைகுண்டத்தில் பார்வர்டு பிளாக் துவக்க தினவிழா
பொதுத்தேர்வில் சாதனை படைத்த கயத்தாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பெருங்குளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்
வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!