ராஜ்யசபா எம்பி பதவி தச்சை கணேசராஜா புதிய தகவல்
5/28/2022 7:26:23 AM
நெல்லை, மே 28: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு 2 ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்பாளர்கள் தேர்வு கட்சித் தலைமையால் தீவிரமாக நடந்தது. ராஜ்யசபா எம்பி பதவிக்கு நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பெயரும் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அவரும் இதற்காக கட்சித் தலைமையை அணுகி முகாமிட்டிருந்தார். எனினும் கடைசி நேரத்தில் சிவி சண்முகம், தர்மர் ஆகிய இருவரும் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ளதாகவும், பாளை. தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 1977ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி கல்வி பயின்றதாகவும், ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்படாததற்கு கல்வித்தகுதி காரணமில்லை எனவும் தச்சை கணேசராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
உலக யானைகள் தினத்தையொட்டி நெல்லையப்பர் கோயிலில் மாணவர்களுக்கு யானைகள் விழிப்புணர்வு பயிலரங்கம்
அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: நெல்லையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி
நெல்லையில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு; ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்: ரூ.2.50 கோடி மானியம் என கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை அஞ்சல் கோட்டத்தில் 24 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை: நகர்ப்புற மக்கள் அதிக ஆர்வம்
நெல்லை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா
முள்ளிக்குளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!