ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
5/27/2022 3:41:53 AM
மாமல்லபுரம்: ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விசிக மாநில தொண்டரணி செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், நிர்வாகிகள், மணமை எழில் ராவணன், சாலமன், சிந்தனை சிவா, பிரகாஷ், கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய, பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,927 வழக்குகளுக்கு தீர்வு
காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!