இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா மாநாடு
5/25/2022 5:53:31 AM
உடுமலை, மே 25: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா கமிட்டி மாநாடு உடுமலையில் நடந்தது. தலைமைக்குழு உறுப்பினர்கள் குருசாமி, நந்தகோபால், சித்ரா ஆகியோர் மாநாட்டை நடத்தினர். கட்சியின் புதிய தாலுகா செயலாளராக வி.சவுந்தர்ராஜன், துணை செயலாளராக நந்தகோபால், பொருளாளராக ரணதேவ், கமிட்டி உறுப்பினர்களாக சுப்பிரமணியம், ஆறுமுகம், மகேஸ்வரன், முத்துக்குமார், சித்ரா, ராகுல், ராஜேஸ்வரி, செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பழனிசாமி நிறைவுரை ஆற்றினார்.
மாநாட்டில், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கணக்கம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகிக்க வேண்டும், பெரியகோட்டை பிரிவில் நகர பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், பெதப்பம்பட்டி நால்ரோட்டில் உள்ள மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
மத்திய மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் பரந்தாமன் எம்எல்ஏ மனுக்களை பெற்றார்
ரக்சாபந்தன் விழா
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜ தோற்கடிக்கப்பட வேண்டும்
மாவட்டத்தில் ரூ.1.77 கோடி மானியத்தில் 455 மல்பெரி விவசாயிகள் பயனடைந்தனர்
நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் பெறுவதற்கான கருத்தரங்கம்
மங்கலம் அருகே நல்லம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!