காலம் தவறி பெய்த மழையால் காய்கறிகள் அழுகியது
5/25/2022 5:53:00 AM
ஊட்டி, மே 25:நீலகிரியில் காலம் தவறி பெய்த மழையால் பெரும்பாலான பகுதிகளில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அழுகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்பின் மழை குறைந்தே காணப்படும். குறிப்பாக, ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மழை பெய்யாது. இது போன்ற சமயங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்ய தயக்கம் காட்டுவார்கள்.
ஆனால், இம்முறை கடந்த இரு மாதங்களாக ஊட்டியில் மழை பெய்தது. இது மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதேசமயம், தாழ்வான பகுதிகளில் பயிர் செய்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாய நிலங்களில் கேரட் அழுகி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக காலம் தவறி பெய்த மழையே என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
போதை பழக்கத்தால் எதிர்காலம் பாழாகி குடும்பம் அழியும் ஊட்டியில் அமைச்சர் ராமசந்திரன் பேச்சு
ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்தன
பர்லியாறு கடைகளுக்கான டெண்டர் ஒத்திவைப்பு
மாவட்டத்தில் காற்றுடன் கனமழை தொடர்கிறது மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மஞ்சூர் - கோவை சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா பூத்துள்ளது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!