கொசூர் கிராம சாலையில் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
5/25/2022 3:33:23 AM
திருச்சி, மே25: தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணப்பாறை அருகே பொத்தப்பட்டி கொசூர் சாலை முதல் வையமலைப்பாளையம் வரை 3 கி.மீ. நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் தரத்தை திருச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டம் கண்காணிப்பு பொறியாளரும், உள் தணிக்கை அதிகாரியுமான முனைவர் கிருஷ்ணசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது தரத்தை துல்லியமாக அறிய உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
வெடிகுண்டு வீசிய வழக்கு திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்
கஞ்சா விற்றவர் கைது
சுதந்திர தினத்தையொட்டி பொலிவுபெறும் காந்திசிலை
தா.பேட்டை பகுதியில் 2000 பனை மரங்கள் நட விதை வழங்கல்
தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!