பொதுப்பாதையை அதிமுக நிர்வாகி ஆக்ரமிப்பு வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் பெண் குடும்பத்துடன் தர்ணா
5/24/2022 4:35:09 AM
திருச்சி, மே 24: மணப்பாறை அருகே பொதுப்பாதையை அதிமுக நிர்வாகி ஆக்ரமித்ததால் வீட்டிற்கு மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படும் பெண் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நீடித்தது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான மக்கள் டிஆர்ஓ பழனிகுமாரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அணியாப்பூரை சேர்ந்த பழனியப்பன் மனைவி தனலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வந்து கூட்டமன்றம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தனலட்சுமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2012ம் ஆண்டு பசுமை திட்டத்தின் மூலம் வீடு கட்டினேன். வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2012 டிசம்பரில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அதற்கு அவர்கள் தங்கள் வீட்டிற்கு வரும் பொதுப்பாதையை அளந்து அத்துக்காட்டி ஆக்ரமிப்பை அகற்றினால்தான் மின் இணைப்பு வழங்க முடியும் என விண்ணப்பத்தை மறுத்தனர். ஆனால் அந்த பொதுப்பாதையை பெரியசாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளார். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் அதிமுக நிர்வாகி. எனக்கு இன்று வரை மின் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே என் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது
வெடிகுண்டு வீசிய வழக்கு திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்
கஞ்சா விற்றவர் கைது
சுதந்திர தினத்தையொட்டி பொலிவுபெறும் காந்திசிலை
தா.பேட்டை பகுதியில் 2000 பனை மரங்கள் நட விதை வழங்கல்
தொட்டியத்தில் மதுரை காளியம்மனுக்கு வளையல் அலங்காரம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!