கரூர் பாலிடெக்னிக் கல்லூரி 38வது ஆண்டு விழா
5/21/2022 7:31:30 AM
கரூர், மே 21: தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் 38வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி தாளாளர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. இதில் விளையாட்டு போட்டி, இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குனரும், தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கந்தசாமி ஐஏஎஸ் காணொலி வாயிலாக மாணவர்களுடன் உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக டோமோரோ நிறுவனர் சிவராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்லூரி துணை தலைவர் ஏ.வி.பொன்வேல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். முனைவர் மோகன்குமார் அனைவரையும் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் ரோப் காரை பயன்பாட்டிற்கு விட பக்தர்கள் கோரிக்கை
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!