துப்புரவு பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
5/21/2022 7:06:43 AM
கடலூர், மே 21: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், தனியார் நிறுவனத்தின் மூலம், ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணியின்போது, இவர்கள் செல்போன் பயன்படுத்துவதாக கூறி, நேற்று முன்தினம் பணிக்கு வந்த பெண் ஊழியர்களை, அந்த தனியார் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர், சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெண் ஊழியர்களை சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை பணிக்கு வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள், அரசு மருத்துவமனை முன்பு திரண்டு நின்றனர். அவர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் விரைந்து வந்து, அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் பணிக்கு சென்றனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!