85 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
5/21/2022 7:01:42 AM
திருப்பூர், மே 21: திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட அவினாசி ரோடு, சாமுண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரி ராஜேந்திரன் மற்றும் ஆய்வாளர் கோகுல்நாதன் மற்றும் அதிகாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள், பழமுதிர் நிலையங்கள் போன்றவற்றில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதிகளில் இருந்த 44 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 85 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. பாலிதீனம் பை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்களை விற்பனை செய்த 15 கடைகளுக்கு ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். மேலும், இதன் பிறகும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் செய்திகள்
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்தல்
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
பாடப்புத்தகங்கள் விநியோகம் மஞ்சி குடோனில் தீ விபத்து
பரணி, கார்த்திகை மேளதாளத்துடன் வழியனுப்பி வைத்தனர்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!