ஓராண்டு ஆட்சி நூறாண்டு பேசும்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் அறிக்கை
5/21/2022 6:56:24 AM
கோவை, மே 21: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடுமையான உழைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, அரசியல் ராஜதந்திரம், மக்களை நேசிப்பது, உதவிசெய்தது என இவை எல்லாம்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற நற்பெயரை பெற்றுத்தந்துள்ளது. அவரது தலைமையில் தமிழகத்தில், லஞ்சம் தவிர்க்கப்பட்டு, நேர்மையாக ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு தலா ரூ.4 ஆயிரம், மகளிருக்கு இலவச பேருந்து, ஆவின் பால்விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை,
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியது, கல்வித்துறையில் மறுமலர்ச்சி, தொழில்வளர்ச்சியில் முதலிடம், வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்க புதிய திட்டங்கள், விவசாய உற்பத்தியை பெருக்க வேளாண்மைக்கு தனி பட்ஜெட், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என பல அதிரடி திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். முதல்வரின் ஓராண்டு சாதனை, நூறாண்டு பேசும். தமிழகத்தை, நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்த, தொடர்ந்து அயராது உழைத்து வரும் தமிழக முதல்வருக்கு நாம் அனைவரும் துணை நிற்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!