சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மனோரா சுற்றுலாத்தலத்தில் மேம்பாட்டு பணிகள்
5/20/2022 6:53:05 AM
பேராவூரணி, மே 20: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மனோரா சுற்றுலாத் தலத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை எம்எல்ஏ அசோக்குமார் ஆய்வு செய்தார். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் 2ம் சரபோஜி கடற்கரை பகுதியான மனோராவில் ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினார். அறுகோண வடிவில், எட்டு மாடியுடன், 23 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் மனோரா என அழைக்கப்படுகிறது. மனோராவை காண்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
எனவே, மனோராவில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் கட்டுவது, படகுச் சவாரி வசதி என புதிய கட்டமைப்பை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ அசோக்குமார் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் சவாரிக்கென படகுக்குழாம் ரூ.45 லட்சம், பயணிகள் ஓய்வு விடுதிக்கு ரூ.30 லட்சம், பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.35 லட்சம் என, மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து தற்போது, மனோராவில் நடைபெற்று வரும் பணிகளை எம்எல்ஏ அசோக்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், திமுக தலைமை கழக பேச்சாளர் அப்துல்மஜீது, ஒன்றிய பொறியாளர் அருண் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!