பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தக்கோரி அமைச்சு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
5/20/2022 6:40:16 AM
நாகை, மே 20: தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் நாகை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சீனிவாச ராவ் தலைமை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாவட்ட துணை தலைவர் மேகநாதன், வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
வேளாண்மை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வட்டார அளவிலான வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் பதவி இடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர். மாவட்ட துணை தலைவர் மீனாட்சிசுந்தரி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!