சிபிஐ அதிகாரிகளின் தொடர் ஆய்வால் பட்டாசு ஆலைகளை மூடிய உரிமையாளர்கள்
5/20/2022 6:24:23 AM
சிவகாசி, மே 20: சிவகாசி பகுதியில் 1200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், ஆலைகளில் 20 சதவீத பட்டாசு மட்டுமே தற்போது தயாரிக்கின்றனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை ெசய்யப்பட்ட பட்டாசு தயாரிப்பதை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், டெல்லியில் இருந்து 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் சிவகாசி தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் அக்கரைப்பட்டி, வெற்றிலையூரணி கிராம பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தினர். அப்போது மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனிருந்தார்.
ஆய்வின்போது சிபிஐ அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு அறையாகச் சென்று, அங்கு தயாரிக்கப்படும் பட்டாசு, அதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் ஆகியவை குறித்து சோதனை நடத்தினர். இதேபோல் வெம்பக்கோட்டை, நாரணாபுரம், மேட்டமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நேற்று ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு ஆலையிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது. பின்னர் பட்டாசு, கெமிக்கல் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். சிபிஐ அதிகாரிகள் சிவகாசி பட்டாசு அலையில் தொடர் சோதனை நடத்தி வரும் தகவல் அறிந்த உரிமையாளர்கள் பலர் ஆலைக்கு ேநற்று விடுமுறை விட்டனர்.
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!