ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
5/20/2022 1:54:42 AM
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ராம் நகர் விரிவு பகுதியில் அடையாறு கால்வாய் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இந்த கால்வாயை ஒட்டிய பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி, கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதையடுத்து, கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற பொதுப் பணித்துறை சார்பில் 6 மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வருவாய் துறை, பொதுப்பணித் துறை ஆகிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூடுதலாக போலீசாரை வரவழைத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அடையாறு கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, அப்பகுதியை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க எச்சரிக்கை பலகை வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ₹5 கோடி என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!