அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
5/19/2022 5:50:42 AM
ஈரோடு, மே 19: உலக அருங்காட்சியக தினம் ஆண்டுதோறும் மே 18ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ‘வெளியூர் முதல் உள்ளூர் வரையிலான அருங்காட்சியகங்கள்’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. இக்கண்காட்சியில், உலக நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், இந்தியாவில் உள்ள பெரிய மற்றும் முக்கிய அருங்காட்சியகங்கள், தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்பட கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு செல்லலாம். பள்ளி மாணவ-மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் இல்லை. கண்காட்சியானது வரும் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!