இ- ஆப்பீஸ் முறையை சிறப்பாக செயல்படுத்திய நெல்லை மாநகர காவல்துறைக்கு டிஜிபி பாராட்டு சான்று வழங்கல்
5/19/2022 4:29:31 AM
நெல்லை, மே19: தமிழக அளவில் நெல்லை மாநகர காவல்துறை இ-ஆப்பீஸ் முறையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு சான்று வழங்கினார். தமிழக காவல்துறையில் மாநகர காவல் துறையில் இ-ஆப்பீஸ் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழக அளவில் நெல்லை மாநகர காவல்துறையில் இ-ஆப்பீஸ் முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை மாநகர காவல்துறையை ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த காவல் மாநகரமாக தேர்வு செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளார்.இச்சான்றிதழை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் கிழக்கு சுரேஷ்குமார், (மேற்கு) சுரேஷ்குமார், முதுநிலை அலுவலர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், தொழில் நுட்ப பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பாஜ அரசை கண்டித்து சுத்தமல்லியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
வாலிபரை கத்திரியால் குத்தியவர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 3 பேர் கைது 28 பாட்டில்கள் பறிமுதல்
அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு நெல்லை மாநகரில் அதிக விபத்து பகுதியாக 23 இடங்கள் தேர்வு ஆக.10ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் ஆய்வு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் 67 பேருக்கு சீட்
வரலட்சுமி நோன்பையொட்டி நெல்லையப்பர் கோயிலில் பெண்கள் 1008 சுமங்கலி பூஜை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!