கொடைக்கானல் சாலையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை
5/19/2022 4:22:54 AM
கொடைக்கானல், மே 19: கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த கோடை சீசன் காலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பிரதான சாலையில் மச்சூர், பெருமாள் மலை, கரடி சோலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பாலம் அமைக்கும் பணிகள் மிக தாமதமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் அல்லது இந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி சீசன் காலம் முடிந்தவுடன் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை சீசன் காலங்களில் இதுபோன்ற சாலை பணிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகள்.
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
ரத்ததான முகாம்
திண்டுக்கல்லில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி
பழநியாண்டவர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவக்கம்
தனியார் பள்ளியில் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு கோட்டாட்சியர் தீடீர் ஆய்வு
மண்சரிந்த இடத்தில் பணிகள் முடிந்தது தாண்டிக்குடி மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!