பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
5/19/2022 4:19:20 AM
சென்னை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட `ரூட் தல’ பிரச்னையால் கீழ்ப்பாக்கம் போலீசார் பச்சையப்பன் கல்லூரி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பச்சையப்பன் கல்லூரியின் பின்புறம் உள்ள நுழைவு வாயில் அருகே ஹாரிங்டன் சாலையில் உள்ள மின்கம்பத்தின் கீழ் 2 பை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை போலீசார் பார்த்தனர். அதில் ஒரு பையில் 8 பட்டாக்கத்திகள் மற்றொரு பையில் பீர் பாட்டிகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து மோதல் சம்பவத்திற்கு காரணமான கிஷோர் மற்றும் பிரேம்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் கைது ெசய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்து பச்சையப்பன் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் பெரம்பூர் பகுதி ரூட் தல மாணவர்களான மாரிமுத்து, தமிழ்செல்வன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே கிஷோர், பிரேம்குமார், மாரிமுத்து, தமிழ்செல்வன் உட்பட 6 பேரை பச்சையப்பன் கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும் செய்திகள்
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: எல்ஐசி அறிவிப்பு
புழல் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை 3 பேர் கைது
பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு
ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...