சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
5/14/2022 12:08:46 AM
நெல்லிக்குப்பம், மே 14: நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சிவலிங்கத்திற்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நந்தீஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தம்பதியர்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதே போல் நெல்லிக்குப்பம் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோயில், திருகண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோயில், வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோயில், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோயில், திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் கோயில், வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்
திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்
2 வருடங்களுக்கு பிறகு நடந்தது கோயில் திருவிழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது
மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!