தலசீமியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
5/14/2022 12:06:38 AM
தர்மபுரி, மே 14: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தலசீமியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி தலைமை வகித்து பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சித்தேரி, சிட்லிங் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், மரபணு நோயான தலசீமியா தாக்கம் உள்ளது. இந்தநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு வயிறு வீக்கம், ரத்தசோகை ஆகிய ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு, 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை என வாழ்நாள் முழுவதும் ரத்தம் அளிக்க வேண்டும். சென்னையில் மட்டும் அளிக்கப்பட்டு வந்த இந்த சிகிச்சை, தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலசீமியா நோய் சிகிச்சை மையத்தில் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இதில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
ஒகேனக்கல் காவிரியில் ஆண் சடலம் மீட்பு
சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை
மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக்க ஒத்துழைப்பு தரவேண்டும்
பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!